நீதிமன்ற செய்திகள்
Court News — வழக்குகள், தீர்ப்புகள், நீதிமன்ற உத்தரவுகள்
- 🔴 தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் – அறப்போர் இயக்கம் வரவேற்பு!
- 🔴 முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு – துரைமுருகன் அறிவிப்பு!
- 🔴 ₹1 கோடி அவதூறு வழக்கு: ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய செப்.21 வரை கால அவகாசம் கோரிக்கை!
- 🔴 திமுகவினர் மீது தொடர் வழக்குப்பதிவு: முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக சேகர்பாபு, ஆ.ராசா மீது போலீஸ் வழக்கு!
- 🔴 "2029-க்குள் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம்" - அமித்ஷா உறுதி; உத்தரகாண்ட், குஜராத், அசாமில் ஏற்கனவே அமல்!

🔴 முன்னாள் திமுக அமைச்சர் எ. வ. வேலு மீதான DVAC வழக்கில் அறப்போர் இயக்கம் தலையீடு - FIR ரத்து கோரும் மனுவை எதிர்க்கும் புதிய சட்ட போர்!
'பணம் கொடுக்கப்பட்டது, ஆனால் சாலையே இல்லை' - ரூ.3.23 கோடி மோசடி வழக்கில் அறப்போர் இயக்கம் குறுக்கீட்டு மனு; நீதிபதி இளந்திரையன் இன்று விசாரணை!

🔴 மனித உரிமை ஆணையத்தில் காலி பதவிகள் - உயர்நீதிமன்றம் அதிரடி; தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் என். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மாநில மனித உரிமை ஆணையத்தில் உள்ள அனைத்து உறுப்பினர் காலிப்பணியிடங்களையும் நிரப்ப உத்தரவு கோரப்பட்டுள்ளது.

🔴 அசிஸ்டண்ட் பேராசிரியர் தேர்வு முறைகேடு வழக்கு: நீதிமன்ற கேள்விக்கு பதிலின்றி PIL வாபஸ்!
42,064 வேட்பாளர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் சீர்தன்மையற்ற தன்மை குறித்து கவலை; நீதிபதிகள் மனுவின் பரிசீலனைத் தகுதி குறித்து கேள்வி எழுப்பியதால் மனுதாரர் விலகிக் கொண்டார்.

🔴 திமுக எம்எல்ஏ வைத்திலிங்கம் மீதான ரூ.28 கோடி ஊழல் வழக்கு: மேல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி - மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை!
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்; திமுகவில் இணைந்த பின் வழக்கு மூடப்பட்டது - தற்போது புதிய ஆட்சியில் மீண்டும் விசாரணை!

🔴 ரூ.10,000 காசோலையை ரூ.1,10,000 ஆக மாற்றியது பளிச்செனத் தெரிகிறது - அதற்கு தனி ஆதாரம் தேவையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி!
காசோலையில் வெளிப்படையான மாற்றம் இருந்தால், அதற்கு தனி ஆதாரம் தேவையில்லை; பளிச்சென்று தெரியும் மாற்றத்தை வைத்தே வழக்கை ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி, கர்நாடகாவைச் சேர்ந்த ராஜசாப் என்பவரின் தண்டனையை ரத்து செய்துள்ளது.

🔴 மனைவியால் கணவரின் சகோதரி மீது பதிவு செய்யப்பட்ட POCSO வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து - உறவினர்களை இழுத்திழுப்பது வழக்கமாகிவிட்டதாக கடும் கண்டனம்!
திருமண பிரச்சனைகளில் மைத்துனர்கள் மற்றும் உறவினர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு அதிர்ச்சியளிப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்து; குழந்தைகள் ஆயுதமாக்கப்படுவதும் கண்டனத்திற்குரியது.

🔴 கைது செய்யும் அதிகாரம் இருந்தாலே போதாது - சட்ட நடைமுறைகளை மீறினால் கைது, ரிமாண்ட் அனைத்தும் சட்டவிரோதம்: அலஹாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி!
GST வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஹேபியஸ் கார்பஸ் மூலம் விடுதலை; கைது நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அலஹாபாத் உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

🔴 "உரிய நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு வர முடியாது" – பள்ளிக்கரணை பிரிகேட் திட்ட வழக்கு தள்ளுபடி!
"பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் 1250 அடுக்குமாடி குடியிருப்புகள் – சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு; நீதிமன்றம் 'நீதித்துறை படிநிலையை' பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை; NGT அல்லது உயர்நீதிமன்றத்தை அணுகாமல் வந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி!"

🔴 "வாயை மூடு அரசியல்" - யூடியூப் பேட்டியில் தவெக பெண் ஆதரவாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் FIR ரத்து மனு தள்ளுபடி; சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் புகார்!
"தவெக பெண் ஆதரவாளர்களை இழிவுபடுத்தும் பேச்சு - சமூக ஊடக பதில்களை 'அரசியல் பழிவாங்கல்' என மறைக்க முடியாது; அமைச்சர் நிர்மல்குமார் புகாரில் பதிவான FIR - நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அதிரடி; மனுதாரர் தரப்பு 'வீடியோ நீக்கப்பட்டது' என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை!"

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் மேல். சமாதான் சாமேராஹ்" - மக்கள் நீதிமன்றத்தை நடத்தும் இந்திய உச்ச நீதிமன்றம்: ஆகஸ்ட் 21 முதல் 23 வரை சிறப்பு நிகழ்வு; வழக்குகளை சமரசமாக தீர்க்க அழைப்பு
"சமாதான் சாமேராஹ்" - மக்கள் நீதிமன்றத்தை நடத்தும் இந்திய உச்ச நீதிமன்றம்: ஆகஸ்ட் 21 முதல் 23 வரை சிறப்பு நிகழ்வு; வழக்குகளை சமரசமாக தீர்க்க அழைப்பு! நீதியை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்தல் என்ற தொலைநோக்கோடு, உச்சநீதிமன்றம் 'சமாதான் சாமேராஹ்' நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது; நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இணக்கமான தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்; வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குத் தரப்பினர் பங்கேற்க அழைப்பு!

🔴 ஆம்ஸ்டராங்க் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு வழிவிட்ட தவெக அரசு - அரசியல் பின்னணிகளும் போலீஸ் என்கவுண்டர் மர்மங்களும்
தமிழகத்தையே உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்டராங்க் கொலை வழக்கு, தற்போது ஒரு அதிரடியான சட்டத் திருப்பத்தை எட்டியுள்ளது. மாநில காவல்துறையின் விசாரணை போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை மத்திய புலனாய்வு முகமைக்கு (CBI) மாற்றி உத்தரவிட்டது . இதனை எதிர்த்து முந்தைய திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தற்போதைய தவெக அரசு அந்த மனுவை வாபஸ் பெற்று, சிபிஐ விசாரணைக்கு வழிவகுத்துள்ளது .

🔴 9-ம் வகுப்பில் மூன்றாம் மொழி வேண்டாம் - மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கண்டிப்பு!
"10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அழுத்தம் 8-ம் வகுப்பு முடிவிலேயே தொடங்கிவிடுகிறது. இந்த நிலையில் 9-ம் வகுப்பில் புதிய மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும்" - சிபிஎஸ்இ-யின் 3 மொழி கொள்கை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி கடும் கருத்து; 6-ம் வகுப்பில் மூன்றாம் மொழியை தொடங்கலாம் என்று பரிந்துரை!

🔴 தேர்தலில் குழந்தைகள் செல்வாக்கு செலுத்தியதாக கருத முடியாது - தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்!
"வாக்காளர்கள் அனைவரும் வயது வந்தவர்கள், சுயாதீனமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள்; ரகசிய வாக்களிப்பு சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது" - தேர்தல் ஆணையம்; இருப்பினும், தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளை அணுகும் விஷயத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க ஒப்புதல்!

🔴 வழக்கறிஞர்களின் சமூக ஊடக விளம்பரம் & டிஜிட்டல் வாடிக்கையாளர் திரட்டல் - உச்சநீதிமன்றம் பார் கவுன்சிலிடம் விளக்கம் கோருகிறது!
"வழக்கறிஞர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்ற தளங்களில் விளம்பர ரீல்கள், ஊதியத்திற்கான சட்ட உள்ளடக்கம், பிரபலங்களுடனான ஒத்துழைப்பு என டிஜிட்டல் திரட்டலில் ஈடுபடுவது தொழில் முறை ஒழுக்கத்தை மீறுவதாகும்" - மனு; நீதிமன்றம் செப்டம்பர் 15-ம் தேதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு; அட்வகேட்ஸ் ஆக்ட் & பார்ஸ் கவுன்சில் விதிகளை மீறும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி பொதுநல மனு!

🔴 பாலியல் வழக்குகளில் நீதிபதிகள் உணர்வுடன் செயல்பட உச்சநீதிமன்றம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற உத்தரவு!
"சிறுமியின் மார்பைப் பிடித்ததும், சல்வார் கயிற்றை அவிழ்த்ததும் கற்பழிப்பு முயற்சி இல்லை" - அலகாபாத் உயர்நீதிமன்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்; தேசிய நீதித்துறை அகாடமி நிபுணர் குழு தயாரித்த அறிக்கையை ஏற்று, அனைத்து நீதிமன்றங்களும் பாலியல் வழக்குகளில் உணர்வு மற்றும் பச்சாதாபத்துடன் செயல்பட வழிகாட்டும் புத்தகத்தை பின்பற்ற உத்தரவு; தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எளிய மொழியில் தீர்ப்புகள் எழுத வேண்டும்!

பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டியவருக்கு ஆயுள் தண்டனை - உயர்நீதிமன்றம் அதிரடி

🔴 பசு வதை தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - "உயர்நீதிமன்ற உத்தரவு திருத்தம் தேவை"
தமிழ்நாடு விலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான உத்தரவு - மாநில அரசு வாதம்; பக்ரீத் பண்டிகையையொட்டி பசு, கன்று வதைக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் ஜூலை 13-ம் தேதி இடைக்காலத் தடை; உத்தரவின் இறுதிப் பகுதி திருத்தம் தேவை - நீதிபதிகள் கருத்து!

🔴 "டீச்சர் இப்படி நடந்துகொள்ள முடியாது" - மாணவர் தற்கொலை வழக்கில் பேராசிரியரின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி!
"கேரள டென்டல் கல்லூரி மாணவர் நிதின் ராஜ் தற்கொலை; பேராசிரியர் எம். கோடண்ட ராம் மீது வழக்கு; 'மாணவர்களை அவமானப்படுத்தும் ஆசிரியர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது' - நீதிபதிகள் விக்ரம் நாத் & சந்தீப் மேத்தா கடும் கருத்து; 'இது மனிதாபிமானமற்ற செயல்' - முன்ஜாமீன் மறுப்பு!"

🔴 எ.வ.வேலு லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்ல அனுமதிப்பது சரியல்ல - அரசு தரப்பு வாதம்; உயர்நீதிமன்ற இடைக்காலத் தடையை எதிர்த்து மேல்முறையீடு; ஜூலை 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு - இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

🔴 முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பண்ணீர்செல்வம் & குடும்பத்தினர் விசாரணையில் இருந்து விலக்கு கோரி இரண்டாவது மனு - நீதிமன்றம் ஜூலை 30 வரை இடைக்கால நிவாரணம்!
"2006-2011 காலகட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011-ல் வழக்கு; 2016-ல் முதல் மனு ஏற்கப்பட்டு விலக்கு; 2025-ல் உயர்நீதிமன்றம் அதை மாற்றி, விசாரணை தொடர உத்தரவு; இப்போது இரண்டாவது மனு - நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இடைக்கால நிவாரணம்; ஜூலை 30 வரை நீதிமன்றில் ஆஜராக தேவையில்லை; DVAC எதிர்மனு தாக்கல் செய்ய உத்தரவு!"
இந்த செய்திகள் Karuppu News இல் இருந்து — this page reads directly from Karuppu's canonical news publication; every article opens on its original page.